செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

யாழில் ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

0 minutes read

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 70 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட முதியவரிடம் இருந்து ஒரு கிலோ கிராம் 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றும்  கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More