செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஆன்மிக சொற்பொழிவில் 121 பேர் பலி – நடந்தது என்ன?

ஆன்மிக சொற்பொழிவில் 121 பேர் பலி – நடந்தது என்ன?

1 minutes read

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் நேற்று இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.

பாபா நாராயன் ஹரி என்ற சாஹர் விஷ்வஹரி போலே பாபா சாமியார் நடத்திய இந்த ஆன்மிக சொற்பொழிவை கேட்க பல்லாயிரக்கணக்கானோர் வந்தனர்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.

இந்த ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்க 80 ஆயிரம் பேருக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், சாமியார் போலே பாபாவின் சொற்பொழிவு நிகழ்ச்சியை காண 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நிகழ்ச்சி நிறைவடைந்த உடன் போலே பாபா புறப்பட்டுள்ள நிலையில், அப்போது அவரை பார்க்க பக்தர்கள் குவிந்தனர்.

போலே பாபாவின் காரை பின் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் ஓடியுள்ளதுடன், சாமியார் போலே பாபாவை பார்க்க முயன்ற பக்தர்கள் அவரை நோக்கி முன்னேறியுள்ளனர்.

இதனால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாமியார் புறப்பட்டபோது அவர் நடந்து சென்ற பாதையில் காலடி மண்ணை எடுக்க ஆயிரக்கணக்கானோர் குனிந்துள்ளனர்.

அப்போது, அவரது காலடி மண்ணை எடுக்க பக்தர்கள் குனிந்தபோது ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதனால், கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்கள் வேகவேகமாக வெளியேற முயற்சித்தபோது நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு அருகே இருந்த சாக்கடைக்குள் விழுந்துள்ளனர்.

மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற சிறிய வாசல் கொண்ட மைதானத்தில் இருந்து வெளியேற முயற்சித்தபோதும் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் பலரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தில் இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த 121 பேரில் 108 பேர் பெண்கள் என்பதுடன், 7 குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்திய சாமியார் போலே பாபா தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை தீவிரமாக தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உள்பட பலர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More