செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் புரூனே மன்னருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

புரூனே மன்னருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

0 minutes read

இந்தியா மற்றும் புரூனே இடையே 40 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டுவரப்பட்ட தூதரக உறவை கொண்டாடும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று புரூனே நாட்டிற்குச் சென்றார்.

பிரதமர் மோடியின் விஜயத்தின் போது, விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு, அவர் தங்கும் ஹோட்டலில் காத்திருந்த இந்திய வம்சாவளியினர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் மோடி புரூனே மன்னர் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்தித்து, இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் மற்றும் வர்த்தக வளங்களை மேம்படுத்தும் திட்டங்களைப் பற்றி விரிவாக பேசினார்.

இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டது.

புரூனே பயணத்தை முடித்து, பிரதமர் மோடி இன்று மாலை சிங்கப்பூர் செல்ல உள்ளார்.

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More