செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட தளபதி உட்பட 31 பேர் பலி

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட தளபதி உட்பட 31 பேர் பலி

0 minutes read

பெய்ரூட்டில் இஸ்ரேல் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு மூத்த ஹிஸ்புல்லா இராணுவத் தளபதி வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார், இது பிராந்தியத்தில் முழுப் போர் பற்றிய அச்சத்தை அதிகரித்துள்ளது.

மூத்த ஹிஸ்புல்லா இராணுவத் தளபதி இப்ராஹிம் அகில் மரணம் ஹிஸ்புல்லாவால் உறுதிப்படுத்தப்பட்டது.

ஹிஸ்புல்லாவின் கோட்டையான மக்கள் அடர்த்தியான தாஹிஹ் பகுதியில் நடந்த தாக்குதலில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதுடன், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

பலியானவர்களில் குறைந்தது மூன்று குழந்தைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கில் பாரிய மோதலுக்கான ஆபத்து உள்ளதாக ஐ.நா. அரசியல் விவகாரத் தலைவர் ரோஸ்மேரி டிகார்லோ பாதுகாப்புச் சபையை எச்சரித்து உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More