செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு 43 வருடங்களின் பின்னர் பெட்மின்டனில் தங்கம்|காண்டீபன்

43 வருடங்களின் பின்னர் பெட்மின்டனில் தங்கம்|காண்டீபன்

1 minutes read

வட மாகாணத்தில் தேசிய மட்ட பெட்மின்டன் போட்டியில் சாதனை படைத்த வீரரை பாராட்டும் நிகழ்வு நேற்று(02) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியிலான பெட்மின்டன் ​போட்டிகளில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சற்குணம் காண்டீபன் சாதனை படைத்துள்ளார்.

40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் வட மாகாணம் சார்பில் கலந்துகொண்ட இவர், தேசிய மட்டத்தில் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்

43 வருடங்களின் பின்னர் வட மாகாணம் சார்பில் தங்கப் பதக்கத்தை ஈட்டி இவர் சாதனை படைத்துள்ளார்.

சாதனையாளரை கௌரவிக்கும் நிகழ்வை யாழ். மாவட்ட பெட்மின்டன் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நயணப்பிரிய, யாழ். மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் விஜிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More