புகையிரதங்களுக்கு எரிபொருள் நெருக்கடி இல்லை என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொலன்னாவையிலிருந்து தட்டுப்பாடு இன்றி எரிபொருள் இருப்புகள் பெற்றுக்கொள்ளப்படும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக புகையிரதங்கள் இரத்து செய்யப்படும் அல்லது மட்டுப்படுத்தப்படும் என வெளியிடப்படும் சில அறிக்கைகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எந்தவொரு புகையிரதமும் ரத்து செய்யப்படவில்லை என புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW