இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மன் படைகளால் குரோஷியாவில், கடலுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கடல் கண்ணிவெடி தகர்க்கப்பட்டுள்ளது.
சுமார் 690 கிலோ எடைகொண்ட இந்த கண்ணிவெடி ரிஜேகா துறைமுகத்தில் உள்கட்டமைப்பு பணிகளின்போது அண்மையில், கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 500க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து, சிறப்பு படையினரால் குறித்த கடல் கண்ணிவெடி வெற்றிகரமாக தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது.