செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 67 கோடி தனி நபர்களின் தகவல்கள் திருட்டு; வெளியான தகவல்!

67 கோடி தனி நபர்களின் தகவல்கள் திருட்டு; வெளியான தகவல்!

0 minutes read

தெலுங்கானாவின் கணினி குற்றவிசாரணை பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணையில் 67 கோடி தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தகவல்கள் திருடப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த வினய் பரத்வாஜ் என்ற நபரை கைது செய்து அவரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், 24 மாநிலங்கள் மற்றும் 8 பெருநகரங்களில் உள்ள தனிநபர்களைப் பற்றிய தகவல்கள் திருடப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதேவேளை, கைதான நபர் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை வைத்திருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

வாடகைக் கார் பயன்படுத்துவோர், பான் கார்டு பயன்படுத்துவோர் ஜிஎஸ்டி வரி செலுத்துவோர், ஆர்.டி.ஓ ஆவணங்கள், அமேசான் நெட்பிளிக்ஸ் யூடியூப் சந்தாதாரர்கள், பேடிஎம்- போன்பே பயன்படுத்துவோர் உள்பட இலட்சக்கணக்கானோரின் தகவல்கள் இவ்வாறு திருப்பட்டு இருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More