செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா பிரேசில் முன்னாள் ஜனாதிபதிக்கு 9 ஆண்டுகள் சிறை

பிரேசில் முன்னாள் ஜனாதிபதிக்கு 9 ஆண்டுகள் சிறை

1 minutes read

பிரேசிலில் 1990 முதல் 1992 வரை ஜனாதிபதியாக இருந்தவர் பெர்னாண்டோ காலர் டி மெல்லோ (வயது 73). இவர் அங்கு ஜனநாயக முறையில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் ஆவார்.

பதவியேற்ற 2 ஆண்டுகளிலேயே அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்க முயன்றதால் இவரது செயல்பாடுகள் மீது மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனமான பெட்ரோப்ராசின் துணை நிறுவனத்துடன் ஒரு கட்டுமான நிறுவனத்துக்கான ஒப்பந்தங்களை ஏற்பாடு செய்ய சுமார் ரூ.32 கோடி இலஞ்சம் வாங்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் அவருக்கு எதிராக பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கினர். இதனையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இது தொடர்பான வழக்கு அந்த நாட்டின் உயர் நீதிமன்றில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையில் பணமோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த ஊழல் வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியானது. அதில் பெர்னாண்டோ மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 8 ஆண்டுகள் 10 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பெர்னாண்டோ மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது சட்டத்தரணி கூறி உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More