செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் புலம்பெயர்வு தடுப்பு திட்டம் பலன் தருகிறது – ரிஷி சுனக்

புலம்பெயர்வு தடுப்பு திட்டம் பலன் தருகிறது – ரிஷி சுனக்

0 minutes read

சட்டவிரோத புலம்பெயர்வு தடுப்புத் திட்டம் பலன் தருவதாக, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார்.

சட்டவிரோத புலம்பெயர்வோர், சிறு படகுகளில் இங்கிலாந்திற்கு வருவது 20 சதவீதம் குறைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உள்ளிட்ட இத்திட்டத்தைக் குறை கூறுவோர் இனி அதை நிறுத்திக் கொள்வார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

“கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 5 மாதங்களாக சட்டவிரோத புலம்பெயர்வு 20 சதவீதம் குறைந்துள்ளது. எங்கள் திட்டம் வேலை செய்கிறது.

“இங்கிலாந்திற்கு யாரெல்லாம் வரலாம் என்பது குறித்து அரசாங்கமே முடிவு செய்ய வேண்டும். மாறாக குற்றக் கும்பல்கள் அதைச் செய்யக்கூடாது என்பதே எம்முடைய கொள்கை” என்று அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அதைச் சட்டமாக்க அரசாங்கம் தொடர்ந்து கடினமாக உழைக்கும் என்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More