புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா மியான்மரில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள்!

மியான்மரில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள்!

1 minutes read

மியான்மரில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

யாங்கன் நகரில் இன்று காலை 5.43 மணியளவில் சிறு அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 48 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இது கடந்த 24 மணிநேரத்திற்குள் ஏற்பட்ட 3ஆவது நிலநடுக்கம் ஆகும்.

அதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னர், 2ஆவது நிலநடுக்கம் ஏற்பட்டது. அது அதிகாலை 2.53 மணியளவில் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவான அந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது.

அதற்கு முன்பு முதல் நிலநடுக்கம் நேற்றிரவு 11.56 மணியளவில் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது. அந்நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது.

இவ்வாறு மியான்மரில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளமையால் அந்நாட்டு மக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More