எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர்.
எத்தியோப்பியாவில் இராணுவம் மற்றும் உள்ளூர் போராளிகளுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த தாக்கதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது ட்ரோன் தாக்குதல் என்று அப்பகுதி குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாகக் கூறப்படும் அனைத்து “மோதல் சம்பவங்களை” உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.