செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் ஏலத்தில் விடப்படும் இளவரசி டயானாவின் ஆடைகள்!

ஏலத்தில் விடப்படும் இளவரசி டயானாவின் ஆடைகள்!

0 minutes read

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா அணிந்த 3 ஆடைகள், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏலம் விடப்படுகின்றன.

இந்த ஏலம், செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெறவுள்ளது.

1997ஆம் ஆண்டு டயானா விபத்தில் இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர் தொண்டு நிறுவனங்கள் சிலவற்றுக்காக தமது 70 ஆடைகளை ஏலம் விட்டிருந்தார்.

அதில் 3 ஆடைகளை ஏலம் எடுத்த மிச்சிகனை சேர்ந்த எலன் பெத்தோ என்ற பெண்மணி அண்மையில் காலமானதையடுத்து, அவரிடம் இருந்த டயானாவின் உடைகள் மீண்டும் ஏலத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 ஆடைகளில் டயானா பல முறை அணிந்த, முழுவதும் சிவப்பு நிறத்தில் உள்ள ஆடை, அதிகப்படியாக 4 இலட்சம் டாலர் வரை ஏலம் போகக் கூடும் என எதிர்ப்பார்ப்பதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More