அமெரிக்காவில் டிக்டொக் செயலியின் விற்பனை தொடர்பிலான செயல்பாடுகள் விரைவில் தொடங்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் டிக்டொக் செயலியை ஏறத்தாழ 170 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்தச் செயலியின் உரிமையாளரான Byte Dance நிறுவனத்துடன் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் (5 ஏப்ரல்) ஒப்பந்தம் எட்டப்படும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் செயலியைப் பயன்பாட்டில் வைத்திருக்கத் விரும்புவதாகத் டிரம்ப் கூறியுள்ளார்.
இதேவேளை, Byte Dance நிறுவனம் டிக்டொக் செயலியை ஏப்ரல் ஐந்தாம் திகதிக்குள் அமெரிக்க நிறுவனத்திடம் விற்கவேண்டும் என்றும், இல்லாவிட்டால் தேசியப் பாதுகாப்புக் காரணங்களுக்காக அமெரிக்காவில் அது தடை செய்யப்படும் என்று டிரம்ப் காலக்கெடு விதித்திருக்கிறார்.
இதற்கிடையே, டிக்டொக் செயலியை வாங்கப் பலர் முன்வந்துள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. எலோன் மஸ்க் மட்டுமின்றி Microsoft நிறுவனம், Oracle மென்பொருள் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களும் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.