செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ஈரானில் கொரோனாவிலிருந்து தப்புவதற்காக விஷ சாராயம் குடித்த 27 பேர் உயிரிழந்தனர்.

ஈரானில் கொரோனாவிலிருந்து தப்புவதற்காக விஷ சாராயம் குடித்த 27 பேர் உயிரிழந்தனர்.

1 minutes read
சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் அதிகம் பாதித்த நாடுகளில் ஈரானும் ஒன்று. இங்கு இந்த வைரஸால் 237 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 7,161 பேருக்கு வைரஸ் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு ஈரானில் கொரோனா வைரஸின் தாக்குதலின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில், சாராயம் குடித்தால் இந்த வைரஸிலிருந்து தப்பிக்கலாம் என அங்கு வதந்திகள் பரவி வருகின்றன. இதை நம்பி மக்கள் சாராயத்தை தேடித்தேடி வாங்கி குடிக்க தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு ஈரானின் குஜெஸ்தான் மாகாணம் மற்றும் அல்பார்ஸ் மாகண பகுதிகளில் விஷ சாராயம் குடித்த 27 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 220 பேர் பல்வேறு வியாதிகளுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ‘மெத்தனோல்’ என்ற எரிசாராயம் கலந்த மதுவை குடித்ததால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருப்பதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஈரானில் சாராயத்துக்கு அரசாங்கத்துக்கு தடை விதித்துள்ள நிலையில், கொரோனா வைரஸை தடுக்கும் என நம்பி விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ள இந்த சம்பவம் ஈரான் முழுவதும் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More