பாகிஸ்தானில் இராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலையும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளன.
இதனால் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் குறைப்பு, வெளிநாட்டுத் தூதரகங்களின் எண்ணிக்கை குறைப்பு மற்றும் உளவு அமைப்புகளுக்கான நிதி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான தகவலின்படி, இராணுவத்துக்கான சிறப்பு நிதி குறைக்கப்பட்டமையால், வீரர்களுக்கு போதுமான உணவு வழங்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உணவுப்பொருள் விநியோகம் மற்றும் போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பாக சரக்குப் போக்குவரத்து தலைமை அதிகாரி மற்றும் இராணுவ ஜெனரல் ஆகியோருடன், அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.