செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பொலிசாரால் தூக்கிட்ட விவசாயி

பொலிசாரால் தூக்கிட்ட விவசாயி

0 minutes read

தமிழ்நாடு உதகை என்னும் இடத்தில் பொலீஸார் திட்டியதால் மன உளைச்சலுக்கு உள்ளான விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள கெந்தோரை புதுவீடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (38). இவர் விவசாயம் செய்து வந்துள்ளார் நேற்று முன்தினம் தேனாடுகம்பை பகுதியில் மது அருந்திவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் சீனிவாசன் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், சீனிவாசன் மீது வழக்குபதிவு செய்து ரூ.15 ஆயிரம் அபராதமாக கேட்டதோடு, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

மன உளைச்சலுடன் இருந்த சீனிவாசன், நேற்று காலை அவரதுதோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண் டுள்ளார்

இதையறிந்த உறவினர்கள் மருத்துவமனை சவக்கிடங்கு பகுதியில் திரண்டு போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More