செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கொரோனாவால் பீகார் தேர்தலை தள்ளி வைக்க முடியாது | நீதிமன்றம்

கொரோனாவால் பீகார் தேர்தலை தள்ளி வைக்க முடியாது | நீதிமன்றம்

1 minutes read

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை காரணம் காட்டி பீகார் தேர்தலை தள்ளி வைக்க முடியாதென உச்சநீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. அதன் பதவிக்காலம் முடிவடைவதால்,  எதிர்வரும் ஒக்டோபர்- நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் என்று தெரிகிறது.

இதனிடையே கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவது சரியான முடிவல்ல என்றும், பீகாரில் கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்த பின் சட்டசபை தேர்தலை நடத்தலாம் என்றும்  அதுவரை தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரியும்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பீகார் தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையகம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனாவை காரணம் காட்டி பீகார் தேர்தலை தள்ளி வைக்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.0Shares

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More