செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் தமிழக அரசு அறிவிப்பு!

40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் தமிழக அரசு அறிவிப்பு!

1 minutes read

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் புதிதாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் தமிழகத்தின் கொரோனா நிலைவரம் தொடர்பில் சென்னை உயிர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் மேற்படி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ கடந்த ஆண்டை விட தொற்று பரவல் மோசமாக உள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை எல்லை மீறி சென்றுள்ளது. அதேநேரம் போதிய அளவான தடுப்பூசி கையிருப்பில் இருக்கிறது. 40 வயதானவர்களுக்கும் விரும்பினால் தடுப்பூசி போடும் திட்டம் உள்ளது” எனத் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More