செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கொரோனா டெல்லியில் இன்று முதல் முழு ஊரடங்கு அமுல்!

கொரோனா டெல்லியில் இன்று முதல் முழு ஊரடங்கு அமுல்!

1 minutes read

டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொண்டு வருவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக நேற்று ஒரே நாளில் டெல்லியில் மாத்திரம் 25 ஆயிரத்து 462 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு புதிதாக 161 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகளை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) அறிவித்தார்.

அந்த அறிவிப்பில், “டெல்லி இப்போது கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொண்டு வருகிறது. தினமும் 25 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்படுகிறது.

புதிய பாதிப்பு இதே நிலையில் நீடித்தால், சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துவிடும். மருத்துவமனைகளில் படுக்கைகள் குறைவாகவே உள்ளன.

எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

அத்தியாவசிய சேவைகள், உணவு சேவைகள், மருத்துவ சேவைகள் தொடர்ந்து நடைபெறும்.

திருமண நிகழ்ச்சியில் 50 பேர் வரை மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படும். இதற்காக தனித்தனியாக அனுமதி அட்டைகள் வழங்கப்படும்.

வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என அவர் மேலும் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More