செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு!

அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு!

1 minutes read

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடம்பெற்றது. இதில் 33 அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் நாளை முதல் 24 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், கொரோனா நிலவரம், ஒக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட முக்கிய விடங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதன்போது, தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், ரெம்டெசிவிர் மருந்து போதுமான அளவு இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கட்டளைகளையும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More