செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் நாளைமறுநாள் மீண்டும் பதவியேற்பு!

கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் நாளைமறுநாள் மீண்டும் பதவியேற்பு!

1 minutes read

கொரோனா பெருந்தொற்றுக்கு நடுவே கேரளாவில் புதிய அரசு வரும் வியாழக்கிழமை பதவியேற்கிறது. அம்மாநிலத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி கூட்டணி அரசு கொரோனா காரணமாக இதுவரை பதவியேற்காமல் உள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பினராயி விஜயன், புதிய அரசின் பதவியேற்பு விழா திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இவ்விழாவில் 140 எம்எல்ஏக்கள், 20 எம்பிக்கள் உள்பட 500 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். விழாவில் பங்கேற்பவர்கள் கொரோனா சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பினராயி விஜயன் குறிப்பிட்டார்.

திருவனந்தபும் மாவட்டத்தில் வரும் 23ம் தேதி வரை கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More