செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா புதிய நாடாளுமன்ற கட்டடம் : முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

புதிய நாடாளுமன்ற கட்டடம் : முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

1 minutes read

புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா கட்டட பணிகளுக்கு, சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியல் மத்திய அரசு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை செயற்படுத்தி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அரசு மேற்படி தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா கட்டுப்பாட்டு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதற்காக இந்த ஆண்டு மார்ச் மாதம்வரை 195 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தருணத்தில் கட்டுமானப் பணிகளை நிறுத்தினால் அதனை நம்பி வாழ்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அந்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More