செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா டெல்லியில் பாரிய தீ விபத்து- 5 கடைகள் முற்றாக எரிந்தான!

டெல்லியில் பாரிய தீ விபத்து- 5 கடைகள் முற்றாக எரிந்தான!

1 minutes read

டெல்லி- சென்ட்ரல் மார்க்கெட் எனக் கூறப்படும் முக்கிய வர்த்தகப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 5 பெரிய கடைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை கடைகளிலேயே குறித்த தீ விபத்து நேற்று (சனிக்கிழமை) ஏற்பட்டுள்ளது. இதில் பலகோடி ரூபாய் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு 30 தீயணைப்பு வண்டிகளுடன் வந்த 100க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள், காலை முதல் மாலை வரை பல மணி நேரம் போராடியே தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More