செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா விக்ராந்த் கப்பலின் சோதனை ஓட்டம் நிறைவு!

விக்ராந்த் கப்பலின் சோதனை ஓட்டம் நிறைவு!

1 minutes read

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதல் விமானம் தாங்கி போர் கப்பலான விக்ராந்த் கப்பலின் சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது.

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றதாகவும், கப்பலின் செயல் திறன் திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 40 ஆயிரம் டன் எடையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது விமானம் தாங்கி கப்பல் விரைவில் கடற்படையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதன் சோதனை ஓட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More