செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஜம்மு- காஷ்மீர் விவசாய துறையில் சிறந்த வளர்ச்சியை நோக்கி!

ஜம்மு- காஷ்மீர் விவசாய துறையில் சிறந்த வளர்ச்சியை நோக்கி!

2 minutes read

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 37ஆவது மற்றும் 35 ஆவது சட்டப் பிரிவுகளை இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து வேளாண் துறை முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் அங்கு புதிய ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த முன்னேற்றங்கள் குறித்து இணைய காணொளி ஊடாக விவாதிக்கப்பட்டதாகவும் இதனை ஒரு பிரபல காஷ்மீர் கல்வியாளர் பிரதீப் குமார் ஏற்பாடு செய்திருந்ததாகவும் சவூதி அரசிதழ் தெரிவித்துள்ளது.

அதாவது, சில மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக ஜம்மு -காஷ்மீரின் உற்பத்தியான மிஸ்ரி செர்ரி, ஸ்ரீநகரிலிருந்து துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

ஜம்மு- காஷ்மீர் அரசு மற்றும் தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) ஆகியவை ஆப்பிள், வால்நட், செர்ரி, பேரிக்காய், பூக்கள் போன்றவற்றிற்காக அதிக அடர்த்தியான தோட்டங்களை அதிகரிக்கும் விவசாயத் துறையை ஊக்குவிக்க கைகோர்த்திருப்பதாக சவூதி அரசிதழ் தெரிவித்துள்ளது.

2021 முதல் 2025 வரை NAFED, 1700 கோடி ரூபாய் முதலீடு செய்யும், இது ஜம்மு- காஷ்மீர் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் மேலதிகமாக 20விவசாயிகள்- உற்பத்தியாளர் அடங்கிய அமைப்பையும் NAFED நிறுவவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையில், ஜம்மு- காஷ்மீர்க்காக மிக உயர்ந்த பட்ஜெட் 1.086 ட்ரில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது வெபினாரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல சமூக-பொருளாதார நடவடிக்கைகளை இதனை எடுத்துக்காட்டுகிறது.

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துவிட்டன. மேலும் இளைஞர்களை பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து திசை திருப்ப அரசாங்கம் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி வருகிறது என்ற உண்மையையும் வெபினார் எடுத்துக்காட்டுகிறது என சவூதி அரசிதழ் தெரிவித்துள்ளது.

சவூதி அரசிதழில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 370 வது பிரிவு, ஜம்மு -காஷ்மீரில் இருந்து இரத்து செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

மேலும், யூனியன் பிரதேசம் புதிதாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்களின் விளைவாக வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு பல நன்மைகளை வழங்க இந்திய அரசாங்கம் இப்பகுதியில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகிறது. அரசாங்கம் வெளி முதலீட்டாளர்களுக்கு ‘வாடகைக்கான மானியங்களையும்’ வழங்குகிறது.

அதேவேளையில், ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த தொழில்நுட்ப ஆர்வமுள்ள இளம் பெண் தொழில்முனைவோர்களும் வணிக வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள அரசியல், சமூக, பொருளாதார, பாலினம் தொடர்பான விழிப்புணர்வு இல்லாமை உள்ளிட்ட சவால்களிலிருந்து விரைவாக வெளியேறி வருகின்றனர்.

இந்த பெண்கள் அனைவரும் வருங்கால வாடிக்கையாளர்களை குறிவைக்கும் திறன்களைக் கொண்டுள்ளனர், இது முன்பை விட வேகமாக தங்கள் வணிகத்தை வளர்க்க உதவுகிறது.

இதேவேளை சமூகத்தின் பலவீனமான பிரிவினரை மேம்படுத்துவதற்கு முக்கியமான இடஒதுக்கீடு சட்டங்கள் ஜம்மு- காஷ்மீருக்கு பொருந்தாது.

ஏறக்குறைய 70 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, காஷ்மீரைச் சேர்ந்த அரசியல்வாதிகள், சுயாட்சி போன்ற கோஷங்களால் சாதாரண மக்களை தவறாக வழிநடத்தினர்.

மேலும் ஜம்மு- காஷ்மீர் வளர்ச்சிக்கான மகத்தான மத்திய அரசின் பண மானியங்கள் இருந்தபோதிலும் மக்களை மையப்படுத்திய பிரச்சினைகளை தீர்க்க மறந்துவிட்டதாக சவுதி அரசிதழ் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More