செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை!

ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை!

1 minutes read

ஆயுள் தண்டனைக் கைதிகள் 700 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சி.பி.ஐயின் விசாரணையில் உள்ளதாகவும், அதற்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்தார்.

அதேநேரம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணையை விரைந்து நடத்தி முடிப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

அதேவேளை கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை அரசு நடத்தும் எனத் தெரிவித்த அவர், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More