செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா குலாப் சூறாவளி ; கடலில் பயணம் செய்யும் மீனவ சமூகத்துக்கான எச்சரிக்கை

குலாப் சூறாவளி ; கடலில் பயணம் செய்யும் மீனவ சமூகத்துக்கான எச்சரிக்கை

0 minutes read

வடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” (‘Gulab’) என்ற சூறாவளியானது தென் ஒடிசாவுக்கு அண்மையாக வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவிழந்துள்ளது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் வட அகலாங்குகள் 15.0N – 20.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 80.0E – 90.0E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசாவை தாக்கிய சூறாவளி புயல், இன்று அதிகாலை 2:30 மணியளவில் வடக்கு ஆந்திராவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து.

இது அடுத்தடுத்த மணிநேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More