செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஜம்மு- காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் தாக்குதல்!

ஜம்மு- காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் தாக்குதல்!

0 minutes read

ஜம்மு -காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நேற்று (திங்கட்கிழமை) இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் பதுங்கியுள்ள மேலும் சில பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, இதற்கு முன்னதாக ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன்போது அவர்களுக்கு சரணடைய வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அதை செய்ய மறுத்துவிட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More