செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா காஷ்மீர்-உத்தரபிரதேசத்தில் இன்று நிலநடுக்கம்!

காஷ்மீர்-உத்தரபிரதேசத்தில் இன்று நிலநடுக்கம்!

1 minutes read

ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தானை மையமாக கொண்டு இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.7 ஆக பதிவானது.

இதன் எதிரொலியாக காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று காலை சுமார் 9.45 மணிக்கு உத்தப்பிரதேசம் மாநிலம் நொய்டாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் கட்டிடங்கள் குலுங்கின. வீடுகளில் இருந்த பொருட்கள் கீழேவிழுந்து உருண்டு ஓடியது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியுடன் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். இதில் உயிர் சேதம், பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இதே போல் உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி பகுதியில் இன்று அதிகாலை சுமார் 3.15 மணி அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More