செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா உக்ரைன் போர்ப் பதற்றம் : இந்தியர்களை மீட்பதற்கான உடனடி திட்டம் இல்லை எனத் தெரிவிப்பு!

உக்ரைன் போர்ப் பதற்றம் : இந்தியர்களை மீட்பதற்கான உடனடி திட்டம் இல்லை எனத் தெரிவிப்பு!

1 minutes read

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்கான உடனடி திட்டம் எதுவும் இல்லை எனவும், தற்போது அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தே கவனம் செலுத்தி வருவதாகவும், வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார்.

டெல்லியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தூதரக அளவிலான தொடர் பேச்சுவார்த்தைகள் மூலமாக பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகம் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பதோடு, கள நிலவரத்தையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

அங்கிருக்கும் இந்தியர்கள், இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் தான் தற்போது முழு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அவர்களை அங்கிருந்து மீட்டு வருவது தொடர்பாக எந்தவொரு உடனடி திட்டமும் இப்போதைக்கு இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More