செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்திய மீனவர்களுக்கு யாழில் விளக்கமறியல்

இந்திய மீனவர்களுக்கு யாழில் விளக்கமறியல்

0 minutes read

வல்வெட்டித்துறையில் தஞ்சம் அடைந்த நான்கு இந்திய மீனவர்களையும் 2023 ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நான்கு இந்திய மீனவர்கள் நேற்று(28) நள்ளிரவு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகின் இயந்திர கோளாறு காரணமாக வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் உள்ள கடற்கரையில்  தஞ்சமடைந்தனர். 

தஞ்சமடைந்துள்ள இந்திய மீனவர்களை வல்வெட்டித்துறை பொலிஸார் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். 

இதன்போதே நீதவான் நீதிமன்றம் நான்கு இந்திய மீனவர்களையும் 2023 ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More