புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா அம்பானியின் குடும்பத்துக்கு Z+ பாதுகாப்பு

அம்பானியின் குடும்பத்துக்கு Z+ பாதுகாப்பு

0 minutes read

இந்தியாவின் மிகவும் பிரபலமானவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு, அந்நாட்டு உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையில், மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி வருகின்றது.

அந்த வகையில், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் (Reliance) குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மிக உயர்ந்த அளவிலான ‘Z+’ பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இதே ‘Z+’ பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் பாதுகாப்பு தொடர்பான வழக்கொன்றின் விசாரணையின் போதே, உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

எவ்வாறு இருப்பினும், ‘Z+’ பாதுகாப்புக்கு ஆகும் செலவை முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரிடமே வசூலிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More