செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 499 நகரங்களில் நீட் நுழைவுத் தேர்வு இன்று நடக்கிறது

499 நகரங்களில் நீட் நுழைவுத் தேர்வு இன்று நடக்கிறது

1 minutes read

மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்ய ஆண்டு தோறும் இந்திய மத்திய அரசு நீட் தேர்வு நடத்தி வருகிறது.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே தகுதி தேர்வு அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.

இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடக்கிறது.

நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

நீட் தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான முன்னறிவிப்பு அனைத்து மாணவ மாணவியருக்கும் இணையதளம் மூலம் தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது.

தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகள் முன்னதாக ஒரு மணி நேரத்துக்கு முன் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும்.

தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது.

இன்று அதிகாலை முதலே மாணவ, மாணவிகள் தேர்வு மையத்திற்கு வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்கள் நீட் தேர்வு தொடர்பான மையங்களை https://neet.nta.nic.in/ என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More