செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் செந்தில்பாலாஜி | காவேரி மருத்துவமனை அறிக்கை

தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் செந்தில்பாலாஜி | காவேரி மருத்துவமனை அறிக்கை

0 minutes read

அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் நிலை தொடர்பாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்இ” அமைச்சர் செந்தில்பாலாஜி ஜூன் 15-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய நோய் மூத்த மருத்துவர் ரகுராம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவரை சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்துள்ளனர்.

தற்போது அவருக்கு அறுவை சிகிச்சைக்கு முன்பு செய்ய வேண்டிய சோதனைகள் செய்யப்பட்டுவருகிறது. இந்த சோதனையின் அடிப்படையில் செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜிஇ ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் கொண்ட குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More