நான்காம் சுற்றுப் பாதையை வெற்றிகரமாக அடைந்த சத்திரியன் -3 . சத்திரியன் 3 ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14 ஆம் திகதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பின் புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தப்பட்டது.
பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது. இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படுகிறது.
சத்திரியன் -3 மூன்று கட்டங்களாக விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது. இந்நிலையில், நான்காவது முறையாக இன்று சுற்றுப்பாதை மேலும் உயர்த்தப்பட்டது.
நான்காவது சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.