செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நிலவின் ஈர்ப்பு விசையில் சந்திரயான் 3 வெற்றி

நிலவின் ஈர்ப்பு விசையில் சந்திரயான் 3 வெற்றி

1 minutes read

நிலவு குறித்த ஆய்வில், அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் முன்னிலையில் இருந்து வருகிறது. 2008-ம் ஆண்டு சந்திரயான் 1, 2019-ம் ஆண்டு சந்திரயான் 2 ஆகிய விண்கலங்களை நிலவு ஆராய்ச்சிக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ அனுப்பியது.

கடந்த மாதம் (ஜூலை) 14-ந் திகதி சந்திரயான்-3 நிலவின் தென்துருவ பகுதிக்கு அந்த விண்கலம் பயணத்தை தொடங்கி இருக்கிறது.

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது.

இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லபட்டு வருகிறது. ஏற்கனவே 5 கட்டங்களாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது.

சந்திரயான் 3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை கடந்த ஜூலை 30ம் தேதி நிறைவு செய்தது. சந்திராயன்-3 பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடர ஆரம்பித்துள்ளது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி நள்ளிரவு 12.05 முதல் சந்திரயான் 3 விண்கலம் புவிவட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தள்ளுவதற்கான உந்து விசை செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், லூனார் ஆர்பிட் இன்ஜெக்ஷன் (LOI) இன்று இரவு சுமார் 7 மணிக்கு நடைபெற்றது. அதன்படி, நிலவின் ஈர்ப்பு விசையில் தற்போது சந்திரயான் 3 விண்கலம் உள்ளது. ஆகஸ்ட் 23 ஆம் திகதி  நிலவிற்குள் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More