செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மார்ச் 14ஆம் திகதி தமிழக பட்ஜெட் தாக்கல்

மார்ச் 14ஆம் திகதி தமிழக பட்ஜெட் தாக்கல்

1 minutes read

தமிழக சட்டசபை கூட்டம் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான மார்ச் மாதம் 14ஆம் திகதி சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சபாநாயகர் மு.அப்பாவு வெளியிட்டார்.

அன்று காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுவார். அவரது உரை சுமார் 1½ மணி நேரம் இடம்பெறும் என்று தெரிகிறது.

அடுத்த ஆண்டு (2026) தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுதான்.

எனவே, இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் பல இடம்பெறலாம்.

2021-ம் ஆண்டு தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், 5-வது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது.

தொடர்ந்து, 17ஆம் திகதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும். அந்த வாரம் இறுதி வரை பட்ஜெட் மீதான விவாதமும், இரு அமைச்சர்களின் பதில் உரையும் இடம்பெறும். ஏப்ரல் மாதம் இறுதி வரை இந்தக் கூட்டத் தொடர் நடைபெறும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More