பொது மன்னிப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட சுமார் 284 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
65 வயதிற்கு மேற்பட்டவர்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொலை, கொள்ளை, பெண்கள் துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோகம், போதை பொருள் விற்பனை உள்ளிட்ட 40 குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கைதிகள் குறித்த விபரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அனுமதி கிடைத்தவுடன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜே.டபிள்யூ.தென்னகோன் தெரிவித்துள்ளார்.