செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் உலகத் தரமான புதிய பாடத்திட்டம்!

இலங்கையில் உலகத் தரமான புதிய பாடத்திட்டம்!

1 minutes read

சர்வதேச தரத்திற்கு அமைய இலங்கையில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய முதலாம் தரத்தில் இருந்து 13 ஆம் தரம் வரை பாடத்திட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் ஆலோசனைக்கு அமைய, இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார முறைமை, தொழில் சந்தை ஆகியவற்றை உள்ளடக்கியதாக புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பிலான கருத்துக்கள் மற்றும் யோசனைகளை மாவட்ட ரீதியாகப் கல்வித்துறைசார் வல்லுநர்கள், மாணவர்கள், வர்த்தகப் பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடம் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டார்.

மேலும் புதிய பாடத்திட்டத்தை அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கபில பெரேரா தெரிவித்தார்.

புதிய பாடத்திட்டத்தின் மூலம் தற்போதைய கல்வி முறையூடாக மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் என நம்பப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More