செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்கான மாமியார் மற்றும் மச்சான்!

மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்கான மாமியார் மற்றும் மச்சான்!

1 minutes read

வவுனியா- கண்டி வீதிக்கருகிலுள்ள வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக மருமகன் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் அவரது மாமியார் மற்றும் மச்சான் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் தேக்கவத்தை பகுதியை சேர்ந்த அரியதாஸ் திரேஸ் (வயது – 35) மற்றும் அசோகன் வசந்தி (வயது – 52) ஆகிய இருவருமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல், வவுனியா, வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக காணப்படுகின்ற மரத்திற்கு பின்னால் மறைந்திருந்த சந்தேகநபர், அவ்விடத்திற்கு வருகை தந்த அவரது மனைவியின் சகோதரனுடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தன் உடமையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது முதுகில் குத்தியுள்ளார். அதனை தடுக்க முற்பட்ட மாமியார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதன்போது தாக்குதலில் காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் தாக்குதல் நடத்திய சந்தேகநபரான கிளிநொச்சி- திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞனை, மக்கள் தடுத்து வைத்திருந்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் .

குடும்ப தகராறு காரணமாகவே குறித்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More