செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் நாமலிடம் கோரிக்கை!

ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் நாமலிடம் கோரிக்கை!

1 minutes read

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை, அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்திருந்தனர்.

இதன்போது அவர்கள், தந்தையின்றி அனுபவிக்கும் துயரங்கள் தொடர்பாக அமைச்சருக்கு தெரியப்படுத்தினர்.

ஆகவே தமது தந்தையை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன், மகள் சங்கீதா ஆகியோர் அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தனர்.

இதேவேளை அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் அண்மையில் விடுதலையான அரசியல் கைதிகள் ஆகியோர் அமைச்சர் நாமலை சந்தித்திருந்தனர்.

வடமராட்சியின் முள்ளி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறப்பு விழாவிற்காக அமைச்சர் நாமல், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More