செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் 1கோடியே 18 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி 1வது டோஸ் செலுத்தப்பட்டது!

இலங்கையில் 1கோடியே 18 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி 1வது டோஸ் செலுத்தப்பட்டது!

1 minutes read

அவர்களில் 45 இலட்சத்து 27 ஆயிரத்து 502 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

குறிப்பாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 27 ஆயிரத்து 16 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 83 ஆயிரத்து 518 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம், நேற்று 2 ஆயிரத்து 204 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 409 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது.

மேலும் 61 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 4 ஆயிரத்து 697 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More