செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக 855 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை வாசிப்பு!

பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக 855 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை வாசிப்பு!

1 minutes read

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றப்பத்திரிக்கை கொழும்பு மேல் நீதிமன்றில் வாசிக்கப்பட்டது.

பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யபப்பட்டுள்ள வழக்கு நீதிபதிகள் நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷதீன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட 855 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை குற்றம் சாட்டப்பட்டவர் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து போதுமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவே குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More