செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிண்ணியா குறிஞ்சாகேணியில் பதற்றம்: இழுவைப் படகு உடைந்து பலர் நீரில் மூழ்கினர்

கிண்ணியா குறிஞ்சாகேணியில் பதற்றம்: இழுவைப் படகு உடைந்து பலர் நீரில் மூழ்கினர்

2 minutes read

கிண்ணியா குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கினர்.
இச்சம்பவம் இன்று (23.11.2021) காலை இடம் பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து சம்பவித்திருக்கிறது.

காப்பற்றப்பட்ட 11 பேர் நோயாளர் காவு வண்டியின் மூலமாக கிண்ணியா தள வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்கள்.

இவ்விபத்தில் மாணவர்கள் உட்பட 6 பேர் மரணித்துள்ளதோடு, பலர் காணாமல் போயுள்ளார்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக இடம் பெற்று வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More