செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வீதி அபிவிருத்தி பற்றி முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு ஈபிடிபி திலீபன் கொலை மிரட்டல்!

வீதி அபிவிருத்தி பற்றி முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு ஈபிடிபி திலீபன் கொலை மிரட்டல்!

1 minutes read

தமது வீதியை அபிவிருத்தி செய்ய ஏன் கால தாமதம் ஆகின்றது என்று கேள்வி எழுப்பிய வவுனியா இளைஞர் ஒருவருக்கு ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

முகநூலில் இட்ட பதிவுக்காக தரக் குறைவாக குறித்த இளைஞரை திட்டியதுடன், வரும் ஞாயிற்றுக் கிழமைக்கு இடையில் அவரையும் குடும்பத்தினரையும் கொத்துவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

அத்துடன் பொலிஸில் கஞ்சா வழக்கு பதிவு செய்து குறித்த இளைஞரை சிறையில் அடைப்பேன் என்றும் வவுனியாவை சேர்ந்த ஈபிடிபி எம்.பி கு. திலீபன் கூறியுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை தோற்றுவித்துள்ளது. 

வன்முறையிலல் ஊறிப் போன ஈபிடிபி எந்தக் காலத்திலும் திருந்தாது என்பதுடன் அது தமிழ் மக்களை அழித்தொழிக்க சிங்கள அரசை விடவும் வெறி கொண்டு நிற்கும் என்றும் அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More