செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் | கஞ்சன விஜேசேகர

எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் | கஞ்சன விஜேசேகர

1 minutes read

நாட்டிற்கு எரிபொருள் கப்பல் வருகை தருவது மேலும் தாமதம் அடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

விநியோகஸ்தர்கள் தொடர்புகொண்ட அமைச்சர் இவ்வார ஆரம்பத்திலும் அடுத்த வாரமும் வரவிருந்த பெட்ரோல், டீசல் மற்றும் மசகு எண்ணெய் கப்பல்கள் மேலும் தாமதமடையும் என தெரிவித்ததாக கூறியுள்ளார்.

வங்கி நடைமறைகள் மற்றும் ஏற்பாட்டுப் பணிகள் (logistics) காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த எரிபொருள் கப்பல் துறைமுகத்திற்கு வரும் வரை மின் உற்பத்தி , பொது போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரும் வாரத்தில் வரையறுக்கப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என்பதால், எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More