செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்ளுக்கு எதிராக வழக்கு

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்ளுக்கு எதிராக வழக்கு

1 minutes read

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்பவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 19 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

அதற்கமைவாக  வெள்ளை முட்டையொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாகாவும் சிவப்பு அல்லது கபில நிற முட்டையொன்றின் விலை 45 ரூபாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த விலைகளுக்கு மேலதிகமாக அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்கள் மீது இவ்வாறு வழக்கு தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More