செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 27 ஆயிரம் சிறுவர்கள் அதிகூடிய மந்தபோசணைக்குள்ளாகியுள்ளனர் – தலதா அத்துக்கோரள

27 ஆயிரம் சிறுவர்கள் அதிகூடிய மந்தபோசணைக்குள்ளாகியுள்ளனர் – தலதா அத்துக்கோரள

1 minutes read

இலங்கையில் 17மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் 5 வயதுக்கு குறைந்த 27ஆயிரம் சிறுவர்கள் அதிகூடிய மந்தபோசணைக்கும் இரண்டு இலட்சத்தி 7ஆயிரம் சிறுவர்கள் சாதாரண மந்தபோசணைக்கும் ஆளாகி இருக்கின்றனர்.

இந்த நிலையை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் எமது எதிர்காலம் சந்ததிகள் பாரிய நிலைமைக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 06 ஆம் திகதி இடம்பெற்ற பிள்ளைகள் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிநெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சிறுவர், தாய்மார் மந்தபோசணையில் இலங்கை உலகில் 6ஆவது இடத்திலும் தெற்காசியாவில் 2ஆவது இடத்திலும் இருப்பதாக யுனிசெப் நிறுவனத்தின் அரையாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை காரணமாக எதிர்காலத்தில் எமது சிறுவர்களின் செயற்திறமை, புத்தி கூர்மை மிகவும் எச்சரிக்கையான நிலைமையே ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

அத்துடன் எமது நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 17 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் 5 வயதுக்கு குறைந்த 27ஆயிரம் சிறுவர்கள் அதிகூடிய மந்தபோசணைக்கும் இரண்டு இலட்சத்தி 7ஆயிரம் சிறுவர்கள் சாதாரண மந்தபோசணைக்கும் ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது.

குழந்தையின் போஷாக்கு தாயின் கருவறையில் இருந்தே கிடைக்கவேண்டியதாகும். ஆனால் எமது நாட்டில் தாய்மாறுக்கு வழங்கப்படும் திரிபாேஷா வீழ்ச்சியடைந்திருக்கின்றது.

திரிபாேஷாவுக்கு தேவையான சோளம் இல்லாமை காரணமாக அரிசிமா பயன்படுத்தி திரிபோஷா உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு திரிபாேஷா உற்பத்தி செய்ய முடியுமா? கர்ப்பிணி தாய்மாருக்கு இலவசமாக வழங்குவது என்பதற்காக எதை வேண்டுமானாலும் வழங்குவதா அல்லது போஷாக்குமிக்க திரிபாேஷாவை கர்ப்பிணி தாய்மாருக்கு வழங்க எடுக்கும் நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் பதில் சொல்லவேண்டும்.

எமது அரசாங்கத்தில் கர்ப்பிணி தாய்மாருக்கு 20 ஆயிரம் ருபாவுக்கு உணவுப்போதி வழங்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால் தற்பாேது அந்த நடவடிக்கை முறையாக இடம் பெறுவதில்லை என தாய்மார்கள் தெரிவிக்கின்றனர். 20ஆயிரம் ரூபாவுக்கு வழங்குவதற்கு போஷாக்கு உணவுகள் இல்லை, அதனால் இந்த விடயத்துக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் வெளிநாட்டு தொழிலுக்கு செல்லும் தாய்மாருக்கு நாங்கள் சட்ட திட்டங்களை அமைத்திருந்தோம். ஆனால் இன்று அந்த சட்டங்களை உதாசீனம் செய்து, பால்குடி குழந்தைகள் இருக்கும் தாய்மாரை வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

நாட்டின் டொலர் பிரச்சினைக்காக குழந்தைகளை ஏன் பழியாக்கவேண்டும். எனவே அரசாங்கம் வேறு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு முன்னர் சிறுவர்கள், தாய்மாரின் மந்தபாேஷன நிலைமையை போக்குதற்கு முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More