செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய திட்டம்

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய திட்டம்

1 minutes read

புலம்பெயர்ந்த மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை கருத்திற்கொண்டு லிற்றோ சமையல் எரிவாயு நிறுவனம் புதிய நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளது. 

இதன்படி, வெளிநாட்டில் இருந்தவாரே உள்நாட்டு எரிவாயுவை பதிவு (Oder) செய்வதற்கான மென்பொருள் செயலியை (Home Delivery App) லிற்றோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த மென்பொருள் பயன்பாட்டின்படி, வெளிநாட்டில் இருந்தவாரே லிற்றோ உள்நாட்டு எரிவாயுவை அமெரிக்க டொலர்களில்செலுத்தி பதிவு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மென்பொருளை கூகுள் பிளே மற்றும் ஆப் ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிய மென்பொருள் தொடர்பான கூடுதல் விவரங்களை 1311 என்ற லிட்ரோ வாடிக்கையாளர் இலக்கத்தை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கூறுகையில், லிட்ரோ சமையல் எரிவாயு உள்நாட்டு சந்தையில் 80 சதவீத பங்குகளுடன் முன்னணியில் இருப்பதால், மேம்படுத்தப்பட்ட புதிய அம்சமாக இது நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தப்படுமென குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More